ஆறு பேருக்கு இளம் கலைஞர் விருது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
ஆறு பேருக்கு இளம் கலைஞர் விருது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான இளம் கலைஞர் விருதுக்கென அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

திணைக்களத்தால் நடத்தப்படவிருக்கும் 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழாவையொட்டி இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.

இதன்படி அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எம். றம்ஸானா (பிறை எப்.எம்), சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.ஆர். இஸ்ஸத் றீஹானா (அனார்), சம்மாந்துறையைச் சேர்ந்த சித்தி றபிக்கா பாயிஸ், மருதமுனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். சினாஸ் (பிறை எப்.எம்), நிந்தவூரைச் சேர்ந்த யூ.எல்.எம். சஜித் ஆகியோரே இளம் கலைஞர் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனரென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தின் வருடாந்த தமிழ் இலக்கிய விழாவில் இவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

துயர் பகிர்வோம்

ஆறு பேருக்கு இளம் கலைஞர் விருது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)