புதிய உலமாக்கள் அறிமுகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர்க் கிளையில் சன்மார்க்கக் கல்வியைப் பூர்த்தி செய்து சான்று பெற்ற புதிய உலமாக்கள் 29 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த புதிய உலமாக்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஒன்றை நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா சபை சிறப்புற ஏற்பாடு செய்து நடத்தியது.

நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி என். இஸ்மத் (ஷர்கி) தலைமையில், வெள்ளிக்கிழமை (19) ஜும்ஆத் தொழுகையின் பின்னர் நிகழ்வு இடம்பெற்றது.

நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் மௌலவி எம்.யூ. ஆஷிக் அலி (காஷிபி) புதிய உலமாக்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அத்துடன் நிகழ்வில் நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமாவில் இணைத்துக் கொள்ளப்பட்டமைக்கான சான்றிதழ்களும், நினைவுச்சின்னங்களும் புதிய உலமாக்களுக்கு வழங்கப்பட்டன.

அதேவேளை பெருந்தொகையான பொது மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

புதிய உலமாக்கள் அறிமுகம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY