நாடளாவி வியாபிக்கும் ஆர்ப்பாட்டங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
நாடளாவி வியாபிக்கும் ஆர்ப்பாட்டங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
நாடளாவி வியாபிக்கும் ஆர்ப்பாட்டங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள் பெருமளவில் திரண்டு அரசுக்கு எதிராக இந்த ஆட்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

குறிப்பாக மலையகத்தைச் சேர்ந்த தலவாக்கலை, கண்டி, மடவளை உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பெருமளவு மக்களைக் கொண்டதாக அரசுக்கு எதிரான இந்த ஆட்பாட்டங்கள் இடம்பெற்றன இதேவேளை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் வாழ்க்கைச் செலவு உயர்வு பொருட்களுக்கான தட்டுப்பாடு இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசுக்கு எதிராக தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் இரவு வேலைகளில் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி மருதமுனை, சாய்ந்தமருது, கல்முனை முதலான பிரதேசங்களில் நேற்று இரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற அதேவேளை நிந்தவூர் சாம்மாந்துறை முதலான பிரதேசங்களில் இன்று இரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

புனித நோன்பு காலமாதலால் இந்த ஆர்ப்பாட்டங்கள் இரவு வேலைகளில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

நாடளாவி வியாபிக்கும் ஆர்ப்பாட்டங்கள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்