உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் அனைத்து தேவாலயங்களிலும் நேற்று விசேட ஆராதனைகளுடன் கூட்டுத் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

உயிர்ப்பு பெருவிழாவின் பிரதான நிகழ்வுகள் யாழ்ப்பாண நகர மரியன்னை பேராலயத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது.

இதனை யாழ். மறைமாவட்ட ஆயரின் அருட்சகோதர் என் டீபன் ராஜ் அவர்கள் நடத்திவைத்தார்.

தவக்காலத்தின் மறுமலர்ச்சியில் உயிர்த்த ஞாயிறு அன்று “இயேசுப்பிரான் காட்டிய வாழ்வியல் பாடங்கள்” என்னும் தலைப்பிலான சிறப்பு கூட்டுப்போதனையும் இடம்பெற்றது. இதில் யாழ். மாவட்டத்தில் இருந்து பல பாகங்களிலும் வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று, யாழ். மாவட்டத்தின் சகல தேவாலயங்களிலும் நேற்று விசேட ஆராதனைகளும் வழிபாடுகளும் திருப்பலி ஒப்புக் கொடுப்புகளும் நடைபெற்றன.

உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)