posted 16th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- தமிழ் storeறினுள் மயக்கமாக்கப்பட்டு அடைக்கப்பட்டு கிடக்கின்றாள். அவளை இடைக்கிடை ஜனாம்மாவும், சிபீயும் தேடினாலும், அத்தை மீனாவோ அல்லது பிரகாஷோ அதைப்பற்றிய ஒருவிதமான அக்கறையும் இல்லாமல் தங்களது மகளின் கல்யாண மோகத்தில் இருக்கின்றார்களே!
- பிரபுவைப் பற்றி தமிழ் கூறுகையிலே பிரகாஷுக்கு தமிழின் கூற்று பிடிக்கவில்லை என்பதினால், தமிழைப் பற்றித் தேடாமல் இருக்கின்றாரா? எப்படியாக இருந்தாலும், தன்னை 20 வருட காலங்களின் பின்பு உயிர்ப்பிச்சை கொடுத்து இப்போது மனிஷனாக அவரது உறவுகளின் முன்னால் நிற்க வைத்த சொந்தக்காரிக்கு செய்யும் நன்றிக் கடனா இது?
- சேதுவின் detectiveவின் கூற்றானது உண்மையாக பிரபு கெட்டவன்தான் என்பதற்கான சான்றுகளுடன் வந்துள்ளதினால், சிபீ இந்த நிட்சயதார்த்தத்தினை நிறுத்துகின்றான் என்று நினைத்துக் கொள்ளலாமா?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 12.06.2026
தனது சுயநலத்திற்காக, சொத்திற்காக, தன் மகனை வைத்து சூதாட்டத்தினை ஆடும் கணேஷனும், அமுதாவும் எப்படி எல்லாம் தமிழை வதைக்கின்றார்கள் என்று பார்க்கவே கேவலமாக இருக்கின்றது.
ஆனால், சிபீ கணேஷனை மிகவும் நம்புகின்றான். ஆனால், இத்தனைக்கும் சிபீ இவ்வளவிற்குத் தமிழை நம்புகின்றானா என்பதுதான் இன்னமும் கேள்வியாக இருக்கின்றது.
ஆனால், சிபீ தமிழின் முன்னால் நம்பிக்கை இல்லாதவனாகவும், தமிழ் இல்லாத பட்சத்தில் தமிழின் மேலே நம்பிக்கை உள்ளவனாகவும் இருப்பது போலக் காட்டிக் கொள்கின்றானா, என்ற இரு பக்கங்களைத்தான் பார்க்கலாமே ஒழிய, சிபீயால் தமிழ் காதலிக்கப் படுகின்றா? இல்லையா? என்ற ஊகமானது சந்தேகமாகத்தான் இங்கு தெரிகின்றது.
நிட்சயதார்த்தற்கு வந்த உறவினர்களின் ஊர்க் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சிபீ, தனது மனதினில் உள்ளதனை, அதுவும் தமிழின் உள்ளுணர்வுகளை உள்வாங்கியவனாக, ஆனால், அதனை தமிழுக்கு மட்டுமல்ல வேறு எவருக்கும் வெளிக்காட்டாதவனாக, தமிழுக்கு ஒரு அதிசயத்தினைக் காண்பிக்க வேண்டும், அதனைப் பார்த்து அனைவரும் பிரமிக்க வேண்டும் என்று தனக்கும், தமிழுக்குமான மாத்து மோதிரத்தினை செய்து வைத்திருக்கையிலேதான், தமிழைக் காணவில்லை என்ற கேள்வியானது சிபீக்கு பீதியினைக் கிளப்பியது.
இசையை ஈவிர்க்கமின்றி அமுதா வீட்டிலுள்ள container றினுள் அடைத்து வைத்து அவளைப் பயமுறுத்தியதும் அல்லாமல், தமிழின் குடும்பத்தினைப் பழிவாங்க முயற்சி செய்தவதானே அமுதா.
அதுமட்டுமல்லாமல், கணேஷன் என்றால் நல்லவனா? அவன் என்ன செய்கின்றான்? இப்போது தமிழை மயக்கி, அவளை அவர்களது store roomமினுள் தமிழை அடைத்து வைத்து, தனது அலுவலை முடிப்பதற்காக தமிழை வருத்துவதுமல்லாமல், ஒரு இளம் பெண்ணை, பணத்தினைக் கொடுத்து ஒழுங்கு படுத்தி, பிரபு ஒரு நடத்தை கெட்டவன் என்று சபையின் முன்னால் படம்பிடித்துக் காட்டி, இந்த நிட்சயதார்த்தத்தினை எப்படியாவது நிறுத்தத் திட்டம் போட்டது மட்டும் சும்மாவா?
அமுதாவினதும், கணேஷனினதும் திட்டமோ ஜனாம்மாவின் சொத்தினை ஜாக்போட் போல சூறையாடுவதுதான். அதற்காக தனது மகன் சேதுவிற்கு தனது தங்கை மீனாவின் மகள், வர்ஷினியைக் கல்யாணம் பண்ணி ஜனாம்மாவின் சொத்தினை ஆட்டையைப் போடுவதுதான்.
அமுதாவோ கணேஷனைக் கல்யாணம் பண்ணுகையில் ஒரு செல்லாக் காசுக்கும் உதவாதவவாகத்தான் ஜனாம்மாவின் வீட்டினுள் வந்தாள். அப்போது அவவிற்கு இவ்வளவு சொத்தினை அனுபவிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்றால் அந்த வாழ்க்கையினை ஒருவராலும் நினைத்துப் பார்க்க முடியாதல்லவா?
எனவேதான் எல்லாச் சொத்தினையும் தங்களதாக்க, அனுதினமும் இவர்கள் திட்டத்தின் மேல் திட்டத்தினை போடுவதனைத் தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
அதுவும், பிராகாஷைக் கொலை செய்யும் முயற்சியில் தோல்வி கண்டான். ஜனாம்மாவைக் கொலை செய்ய முயற்சித்ததனை தமிழ் சரவணனின் உதவியுடன் தடுத்தாள், தமிழைக் கொல்லுவதற்காக தமிழை புதைகுழியினுள் தள்ளி விட்டாள் வெண்பா. இவ்வாறான பலவிதமான கொலை முயற்சிகளை செய்பவர்களாக இருப்பவர்கள், இப்படி அடுத்தடுத்து இரத்த வெறி பிடித்தவர்களை ஒரே கூடாரத்தினுள் வைத்துக் கொண்டிருப்பதில் ஜனாம்மா என்னதான் சந்தோஷத்தினை அனுபவிக்கின்றா.
இதை விட இப்போது பிரபு. இவனின் உண்மையான background தெரியாமல் கல்யாணம் வரைக்கும் வர வைத்துள்ளார்கள் ஜனாம்மாவின் வீட்டில் உள்ளவர்கள். ஆனால், தமிழின் சொல்லினை பிரகாஷும் கேட்கவில்லை.
இது மட்டுமல்லாமல், பிரபுவைக் கூட்டிக் கொண்டு வருகையிலே, கணேஷன், குறிஞ்சி மூலமாக ஒழுங்கு படுத்திய அடியாட்களை அடித்துத் துவைத்து விட்டான் பிரபு. இதைப் பற்றி ஒன்றையும் பிரபு ஜனாம்மாவின் வீட்டில் சொல்லவில்லை. அவன் தானாகவே சமாளித்துக் கொண்டிருக்கின்றான். ஆனால், பிரபுவிற்கு ஒரு நாளும் கணேஷனின் மேலே ஒருவிதமான சந்தேகம் வருவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், கணேஷன் அப்படியான கெட்டவன் என்று பிரபு இன்னமும் நினைக்கவில்லை.
சேதுவும், தன்னுடைய detectiveவான நண்பனின் வருகையினை எதிர்பார்த்துக் கொண்டு வாசலிலே நின்று கொண்டிருந்தான். ஆனால் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. காரணம், வர்ஷியின் முறை மாமன், அவளை மனதாரக் காதலித்தவன், பெற்றார்கள் வர்ஷிதான் சேதுவிற்கு என்று சிறு வயதிலிருந்து சொல்லி சொல்லி ஒன்றாக வளர்க்கப்பட்டவர்கள், இப்போது பிரபு ஒரு கெட்டவன் என்று தெரிந்தால், சேதுவின் ஆன்மாவானது எப்படியெல்லாம் இரத்தக் கண்ணீர் வடிக்கும் என்று நினைக்கையில் மனமோ வெதும்புகின்றது.
இப்படியாக குற்றமானது பிரபுவில் இருக்கின்றது என்று சேதுவின் detective நிரூபித்தால், அதுவும் தமிழின் முயற்சியால், இது நிறைவடைந்தால், வர்ஷியை ஜனாம்மா உடனே இந்த நிட்சயதார்த்தத்தினை நிறுத்தி சேதுவுக்கு கல்யாணம் பண்ண மாட்டாவா? இதெல்லாம் விளங்காமல், கணேஷன் தமிழை மயக்கமருந்து கொடுத்து அடைத்து வைத்திருக்கின்றானே!
இப்படியான சூழ்நிலையானது உருவாக்கப்பட்டது கணேஷனால்தான் என்று தமிழுக்குத் தெரியவந்தால், தமிழ் என்ன செய்யலாம்? ஆலந்தூர் பரிமளத்தின் கதையினை சபையினிலே அவிட்டு விட்டுத்தான் கணேஷனை அடக்கலாம் என்று முடிவெடுத்து மேடையிலே ஏறி, கணேஷன்தான் தன்னை அடைத்து வைத்தவன் என்று கூறி, பரிமளத்தின் கதையினைச் சொல்லி பழிவாங்குவாளா? மன்னிப்பாளா?
நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதனை commentரினில் சொல்லுங்கள்.
உண்மையாக பிரபு நல்லவனா? கெட்டவனா? உங்கள் ஊகம்தான் என்ன என்று சொல்லுங்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!