posted 1st February 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 26ஆம், 27ஆம் திகதிகளை உள்ளடக்கிய Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- ACP நயனி தனது உன்னிப்பான investigationsஇல் கண்டுபிடிக்கப்பட்ட chain ஒன்று. இது ஷரத்சந்திராவினதாகவும் இருக்கலாம் அல்லது கொல்ல முயற்சித்தவரின் உடையதாகவும் இருக்கலாம்.
- இதன் தொடரில், Cheryயிடமும், கிறிஷ்ணபிரஷாத்திடமும் விசாரிப்பதற்காக நயனி தனது குழுவுடன் அபூர்வாவின் வீட்டிற்கு விரைகின்றா.
- அதுமட்டுமல்லாமல், நயனிக்கு ஒரு சந்தேகம் ககனின் மேலே. அதனையும் நயனி விசாரித்தா. ஆனால், ககனிடம் இருந்து ஒரு clueவும் கிடைக்கவில்லை. ஏனெனில் ககன் கொலை செய்யும் அளவிற்கு கெட்டவன் இல்லை என்பதுதான்.
- ஷரத்சந்திராவை வைத்தியசாலையில் வைத்து கொலை செய்ய முயற்சி ஒன்று நடைபெற்றது. இதனை பூமியும், மீராவும் தடுத்தார்கள். பொறுப்பெடுக்க விரும்பாத வைத்தியசாலை நிர்வாகம் ஷரத்சந்திராவை வீட்டிற்கு அனுப்பியது.
- பூமியைக் கொல்வதற்கு இப்போது இரண்டு பேர்கள், அபூர்வாவும், நட்சத்திராவும்.
Salangai Oli - சலங்கை ஒலி - 26 - 27 .01 . 2026
- அயோத்தியலங்கா றகுறாமின் கோள் வந்தது, ஷரத்சந்திராவை தங்களது கிராமத்தில் நடைபெறவுள்ள சீதா றாமர் கல்யாண நிகழ்விற்கான அழைப்பும் வந்தது.
- கிறீஷ்ணபிரஷாத் இதனை ஷாரதாவிடம் உடனே அறிவித்தார், ககனுக்கும், பூமிக்கும் அவர்களுக்குத் தெரியாமலே கல்யாணம் பண்ணி வைப்பதற்கான திட்டமும் கூட.
- இரகசியமான ககன், பூமி கல்யாண விஷயமானது மீரா மூலம் அபூர்வாவிடம் சென்றது. கோபத்தில் இருக்கும் அபூர்வா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
ஷரத்சந்திராவின் Guest houseஇல் நடைபெற்ற கொலை முயற்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நயனியின் சோதனைகளில் அவவிற்கு ஒரு தடயமாகக் கிடைத்தது ஒரு chain ஆகும். இதனை ஒரு முக்கியமான தடயமாக எடுத்தும் கொள்ளலாம். ஆனால், இது ஷரத்சந்திராவைக் கொல்ல நினைக்கும் கொலையாளி அல்லது எதிரியாக இருக்கும் நபர், நயனியின் investigationனை வேறு திசைக்கு திருப்புவதற்கான திட்டமாகவும் இருக்கலாம்.
எனவே, நயனி விசாரித்த மட்டும் பார்க்கையிலே, Cheryயையோ அல்லது கிறிஷ்ணபிரஷாத்தையோ பூரணமாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் இல்லாதபடியினால், இதனை மேலும் உள் நோக்கி ஆராய வேண்டிய நிலையினில் நயனிக்கு அவசியமாகின்றது. ஆனால், வம்சியில் ஏற்கனவே கண் வைத்துள்ள நயனி, கொஞ்சம் ஆறுதலாக வம்சியை விட்டு வைத்தா. இந்த நேர இடைவெளியானது வம்சியின் கோள்களை ஒட்டுக் கேட்பதற்காகவும், இதனால் வம்சியினுடைய தொடர்புகளைக் கண்டு பிடித்து அவனை இந்தக் கொலை முயற்சியில் fix பண்ணுவதற்காகவுமேயாகும்.
ஷரத்சந்திரா கோமா நிலையினில் வைத்திய சாலையில் இருக்கையிலே, அவருக்குக் காவலாக இப்போது இருப்பது பூமிதான். ஆனால், பூமியை வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு செல்வதற்காக வந்த ஷரத்சந்திராவின் தங்கை மீராவும் அங்கு இருந்தா. அதிஷ்டவசமாக, ஷரத்சந்திராவை கொல்வதற்காக வந்த கொலையாளியை பூமி கண்டதினால், அவனிடம் இருந்து காப்பாற்றுகையில், மீராவும் சேர்ந்து அண்ணனைக் காப்பாற்றினார்கள்.
இந்த இரண்டாவது கொலை முயற்சியானது, அதுவும் வைத்தியசாலையில் நடைபெற்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் வைத்தியசாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் weakகாக இருக்கின்றதென்றுதானே கூற முடியும். அதற்காக, வைத்தியசாலையின் பெயர் கெட்டுப் போகும் என்பதற்காக நோயாளியை அம்போ என்று விட்டு விடலாமா? ஒருவரின் உயிரா? அல்லது வைத்தியசாலையின் பெயரா? இறுதியாக ஷரத்சந்திரா வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்குக் கொண்டு போகும்படி வைத்தியசாலையின் நிர்வாகம் சொல்லி விட்டது.
ஆனால், கொலையாளி வைத்தியசாலையினுள் நுளைந்தவனுக்கு, ஒரு வீட்டினுள் நுழைவதற்கு கஷ்டமாக என்ன? மிகவும் இலேசாக உள்ளே நுழைந்து விடுவானே! ஆனால், கொலையாளி இப்போது ஷரத்சந்திராவின் வீட்டினுள்ளே இருந்தால், அதுவும் எனது கணிப்புப் படி அபூர்வா அல்லது நடசத்திராவாக இருந்தால், அல்லது Cheryயாக இருந்தால், ஷரத்சந்திராவின் நிலைமை மிகவும் ஆபத்தாக அல்லவா இருக்கும்.
சீதா – றாமர் கல்யாண நிகழ்வானது ஷரத்சந்திராவின் மிக நெருங்கிய நண்பன் றகுறாமனின் கிராமமான அயோத்தியலங்காவில் நடைபெறவுள்ளதால், ஷரத்சந்திராவின் குடும்பமும், ஷாரதாவின் குடும்பமும் அங்கு சென்றார்கள். அழைக்கப்பட்டோர் மட்டும்தான் இந்த நிகழ்விற்கு வருவேண்டுமென்றில்லை. ஆனால், வருவோருக்குக் கிடைக்கும் அழைப்பானது மிகவும் அருள் மிகுந்ததொன்றாகும் என்பது அக்கிராம மக்களின் ஐதீகம். அத்துடன், இந்த கல்யாண நிகழ்வில் கலந்து கொள்வோரின் பிரச்சினைகள் அனைத்தும் அகன்று போகும் என்பதும் அவ்வூரின் ஐதீகமும் கூட.
இந்த கல்யாண நிகழ்வில், ககனுக்கும், பூமிக்கும் அவர்களுக்கே தெரியாமல் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று கிறிஷ்ணபிரஷாத் ஒரு திட்டத்தினை ஷாரதாவிற்குச் சொன்னார். ஆனால், ஒருவிதமான planனும் இப்பமட்டும் அவரிடம் இல்லை. ஆனால், கிறிஷ்ணபிரஷாத் கடவுளை நம்புகின்றார். எப்படியாவது தங்கள் பிள்ளைகள் சந்தோஷமான வாழ்க்கையில் இணைய வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கம்தான் அவருக்கு.
இப்படி இந்த கல்யாணம் நடக்குமானால், அது ககனுக்கும், பூமிக்கும் தெரிந்தது என்றால், கிறிஷ்ணபிரஷாத்தின் கதை கந்தல்தான். இவர் ஏன்தான் இப்படியான கோணலான புத்தியுடன் திட்டங்களைப் போடுகின்றாரோ தெரியாது. ஆனால், காரணம் இருக்கின்றது. அவருக்கு தனது வாழ்க்கையில்தான் குளப்பங்கள் இருக்கின்றதென்றால், தனது பிள்ளைகள் சந்தோஷமாக வாழட்டும் என்பது மட்டும்தான். தன்னை ஒதுக்கினாலும் சரி, தன்னைத் திட்டித் தள்ளினாலும் சரி பரவாயி்ல்லை என்பதில் மிகவும் seriousஆக இருக்கின்றார் கிறிஷ்ணபிரஷாத்.
வம்சி, ஷரத்சந்திராவின் மீதான கொலை முயற்சியில் முக்கியமான, முதன்மையான கொலையாளி என்று சந்தேகத்தின் பெயரில் நயனியினால் கைது செய்யப் படுகின்றான். இதற்குக் காரணம் எதுவாக இருக்கும்? வம்சியின் முன்னாள் காதலி, வம்சியிடம் உனது கேசானது இப்போது நயனியிடம் போயுள்ளது. அவ உன்னை கைது செய்வதற்கிடையில் நீ எனக்கு நான் கேட்ட 60 இலட்சத்தினைத் தந்துவிடு என்று கூறியதனை இங்கு நினைக்க வேண்டிதாகவுள்ளது.
ஏனென்றால், வம்சி தனது பெற்றார் வாங்கிய வரதட்சனைப் பணமான 2 கோடி ரூபாவில் 60 இலட்சத்தினைக் களவாடி, தீபாவிடம் கொடுத்தான். அதனைக் கொடுத்து விட்டு மீண்டு வருகையில் நயனியின் குழு வம்சியை சுற்றி வளைத்து கைது செய்தது. வம்சியைக் கைது செய்கையில், நயனி, வம்சியிடம் சொன்னது, சரியான ஆதாரங்கள் சேகரிப்பதற்காக உனது கோள்களை tap பண்ணி முடிவெடுத்ததாக. இதில், தீபா பணத்தினை வம்சியிடமிருந்து வாங்கியதுதான் தாமதம் நயனியிடம் போட்டுக் கொடுத்துள்ளாளோ? எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!