posted 9th August 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
நம்பிக்கையூட்டட்டும் வார்த்தைகள், வாழ்க்கையினை வளமாக்கியே தீரும்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
இன்று வரையான மூன்று முடிச்சு சீரியலிலே, முக்கியமான கட்டமாக, சூரியா, நந்தினியுடன் வீட்டை விட்டு வெளியேறினான். சுந்தரவள்ளி, நந்தினியின் குடும்பத்தின் மேலே மிகவும் கொடூரமான கோபத்துடன், ஆரம்பத்திலிருந்தே இருப்பது, பணமா, பண்பா என்ற கேள்வியுடன் இன்று சூரியாவால் பாட்டியிடம் வெளியிடப்பட்ட உண்மை. அருணாச்சலம், நந்தினியின் குடும்பத்திற்கோ சாமி. தோட்டத்தில் வேலை கொடுத்ததல்ல பெரிய விஷயம், நந்தினியின் குடும்பத்திற்கல்லவா வாழ்க்கை கொடுத்து, உணவு கொடுத்து, கல்வியினைக் கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கே படி அளந்தவரை சாமி என்று கையெடுத்து கும்பிடவல்லவா வேண்டும். தகப்பனை ஒத்தவன்தான் சூரியா. ஆனால், சுந்தரவள்ளியோ மனதாலே நல்லவதான். ஆனால், எப்பதான் நந்தினி, சூரியாவின் மனைவியானாவோ அதன் பின்புதான் அவ பத்திரகாளியாக மாறினா. தங்களது குடும்பத்து ஆரம்ப நிலையினையே அக்கு வேறு ஆணி வேறாக விபரித்த பாட்டி.
Moontru Mudichchu | மூன்று முடிச்சு | 30.07.2026 |
கண்ணால் கண்டு கொண்டதனால், சுரேக்கா நந்தினியைக் கைகாட்டி விட்டாள். சும்மாவே இருக்காத சுந்தரவள்ளி இப்போ சூரியனின் ஆதிக்கம் என்றால் சொல்லவா வேண்டும்?
மாதங்கியின் குடியிருந்த வீடானது இப்போது பொலிஸினால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைப்பட்டாயிற்று. மாதங்கி பாவித்த பொருட்களில் முக்கியமானவற்றினை நந்தினி புனிதாவைக் காப்பாற்றப் போயிருக்கையிலே கண்டு கொண்டாள். தான் பாவித்த பொருட்கள் அந்த வீட்டினில் இருப்பதனை இப்போதுதான் மாதங்கி உணர்ந்து கொண்டவளாய், அவளின் எடுபிடியான கௌஷியின் உதவியினை நாடினாள். இப்படியான விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கும் என்று ஏற்கனவே, ஊகித்துக் கொண்ட சூரியா தனது நண்பனான விவேக்கின் உதவியை நாடினான்.
மாதங்கியின் வீட்டினை 24 மணித்தியாலமும் கண்காணிக்கும் வகையில், அவளின் வீட்டின் முன்பாக ஒரு CCTVயினைப் பூட்டி அவதானிப்பதற்கான ஏற்பாடானது செய்யப்பட்டது. வெற்றிகரமாக பூட்டப்பட்ட CCTVயானது மிகவும் துல்லியமாக வேலை செய்யத் தொடங்கியது.
சூரியாவும், நந்தினியும், புனிதாவும் மாதங்கியின் வீட்டிற்குப் போய் சுரேக்காவின் கடத்தல் சம்பந்தமாக ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என்று பார்க்கையிலே, அங்கு சூரியா தேவைப்படும் இடங்களைப் போட்டோ எடுத்துக் கொண்டு வந்திருந்தார். அத்துடன், அந்தப் போட்டோக்களைப் பார்த்துத்தான் சூரியா விவேக்கின் உதவியினைப் பெற்றுக் கொண்டார்.
நந்தினியைக் கரைத்துக் கொட்டுவதிலே கை தேர்ந்து விட்டா சுந்தரவள்ளி. அவவுடைய இந்தக் கொடூரமான மனமாற்றத்திற்கு சூரியாவின் கல்யாணம்தான் காரணமாக இருக்கையிலே, இதைவிட மாதவியும் சேர்ந்து ஊதிப் பெரிப்பித்து விட்டா. ஆனால், அருணாச்சலம் மட்டும்தான் சூரியாவின் பக்கம். இதைவிட மாதங்கி இடைக்கிடை மாதவியை வைத்து சுந்தரவள்ளிக்கு points எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றா. இத்தனைக்கும், சுந்தரவள்ளிக்கோ நந்தினியைப் பொறுத்தமட்டில் மூளையும் மழுங்கியதென்று அருணாச்சலம் எப்பவும் சொல்லிக் கொண்டிருப்பதினால், யாரும் என்னதான் நந்தினியைப் பற்றி அவதூறுகள் சொன்னாலும், அருணாச்சலம் அவரின் மனைவியைப்பற்றி நினைப்பது சரி என்றுதான் தோன்றுகின்றது.
அருணாச்சலமும், எவ்வளவோ நந்தினி, சூரியாவைப் பற்றி எடுத்தியம்பினாலும், அதெல்லாம் சுந்தரவள்ளியிடம் எடுபடுவதாக இல்லை. குடும்பமோ குளம்பியதைக் கண்டு பூரித்தவளாய், தான் நினைத்தபடி நடக்கின்றதென்று கொண்டாடினாள் மாதங்கி.
சுரேக்காவின் ஒரு சொல்லினால், அதாவது, நந்தினியின் தங்கை புனிதாதான் தனக்குச் சாப்பாடி தந்தாள் என்று கூறியிருக்கையிலே எதையுமே யோசிக்காமல், சுந்தரவள்ளி எல்லார் முன்னிலையிலையிலும் அவளது கன்னத்தில் அறைந்தா. ஏழைகளின் சொல்லானது எந்த விதத்திலும் சுந்தரவள்ளி போன்ற இறும்பாபுக் கொண்ட பணக்கார வர்க்கத்தில் எடுபடாது.
இது இறுதியாக நந்தினியின் குடும்பத்தின் மேலே விடிந்தது. நந்தினியின் குடும்பத்தினை ஒரேயடியாக தனது வீட்டினை விட்டுக் கலைத்தா சுந்தரவள்ளி. அருணாச்சலம் எவ்வளவோ சொல்லியும் கேட்காத சுந்தரவள்ளி, தனது பிடிவாதத்தில் நிலைத்து நிற்கையிலே, சூரியா அவவின் மகன், அடங்கி விடுவானா? இதனால், சூரியா தனது முடிவினைச் சொன்னான், செய்தான். அதாவது, தானும் நந்தினியின் குடும்பத்துடன் வீட்டை விட்டுப் போகின்றேன் என்றும், மீண்டும் வருவேன் என்று சத்தியம் செய்தவனாய் சூரியா புறப்பட்டான். அனைவரும் நந்தினியின் தாயின் கிரமாமான பட்டுக் கோட்டையில் உள்ள வீ்ட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
சாதாரணமாக கிராமத்து வீடானது மிகவும் வசதிகள் குறைந்த வகையில்தான் அமைந்திருக்கும். அதுவும் நந்தினியின் வீடோ வறுமைக் கோட்டின் கீழே அமைந்திருப்பது வியப்பதற்கில்லை. ஆனால், இயற்கைச் சூழலோ இங்கு குறைவற்றிருப்பதுமல்லாமல், மிகவும் செல்வாக்கு நிறைந்து வழியும் பூமியாக இருக்கும் என்பதில் எந்த விதத்திலும் அசைக்க முடியாது.
சூரியாவுக்கு அக் கிராமத்து சூழலோ மிகவும் அசௌகரியமாக இருந்தாலும், நந்தினியின் மேலும் அவளின் குடும்பத்தின் மேலே வைத்த அன்பினாலும் எல்லாவற்றினையும் மென்டு விழுங்கி விட்டான். அந்தக் குடும்பத்துடன் அந்யோன்யமாகிவிட்டான் சூரியா.
காலையும் விடிந்தது, சுந்தரவள்ளியின் கெடுபிடியானது சூரியாவை மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியது. அவனது சுயமரியாதையில் சுந்தரவள்ளியின் வார்த்தைகள் சீண்டிப் பார்த்தன. ஒரு கணமும் சிந்திக்காமல் சூரியா தனது வங்கிக் கணக்கில் உள்ள எல்லா பணத் தொகையினை உடனே தனது தகப்பன் அருணாச்சலத்தின் கணக்கிற்கு மாற்றி விட்டான். அதுமட்டுமல்லாமல், அவனது சம்பளத்தையும் தனக்கு வேண்டாம் என்று அறிவித்தும் விட்டான். கவலையில் வாடினார், தகப்பன் அருணாச்சலம், சந்தோஷத்திலும், அகங்காரத்திலும், திமிரிலும் அலங்காரம் கொண்டா சுந்தரவள்ளி.
சந்தோஷத்தின் உச்சியில் ஆடினால் சூரியா இனி தனது காலடியில் வந்து வீழ்ந்து விடுவான் என்ற கற்பனைக்கோ சுந்தரவள்ளிக்குக் குறைச்சல் இல்லை. ஆனால், சூரியாவை பெற்றால் மட்டும் காணாது. உருப்படியாக, அவனை விளங்கி, புரிந்து கொண்டு வளர்க்கவும் வேண்டும். ஆனால், இதற்கு சுந்தரவள்ளி தகுதியானவவாகத் தெரியவில்லை.
சூரியாவைப் புரிந்து கொள்வதில் அருணாச்சலம் வெற்றியடைந்தார். தனது மகன் சூரியாவைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாகப் அறிந்து வைத்திருந்தார். கௌரவத்தினை இறுகப் பிடித்தா சுந்தரவள்ளி. அதுதான் வாழ்க்கை என்றும் நினைத்தா. அவவிடம் ஆணவமோ தலைவிரித்தாடியது. ஆனால், அன்பினையும், பாசத்தையும், பிள்ளையின் குணாதிசயங்களைம் மிகவும் றொம்பத் தெரிந்தவராய், உணர்ந்தவராய், பாசத்திற்குக் கட்டுப்பட்டவராய் அருணாச்சலம் இங்கு மலையின் உச்சியில் இருக்கின்றார்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது Reel Review channel லினில் இந்த சீரியலின் overall analysisஇனைச் செய்கின்றேன். இது முற்றுமாக எனது கருத்து என்பதனால், உங்களுக்கு ஏதாவது கூற விரும்பினால் கூறுங்கள். அத்துடன், எமது channelலினைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன். இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் எமது channelலினை subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel இனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!