posted 23rd July 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
மூன்று முடிச்சு தமிழ் சீரியலிலே இன்று வரையான நிகழ்வுகளாக, புனிதாவை சுரேக்காவின் கடத்தலில் சம்பந்தப்படுத்துவதற்காக அவனின் நண்பனை வைத்து திட்டம் போடுகின்றான் றஞ்சித். காதலின் வேகம் புனிதாவின் கண்களை மறைத்தன. சொற்புத்தி கேட்காதவள் புனிதா. அனுபவிக்க வேண்டும் என்ற அவளது தலையெழுத்தினை யாரால்தான் மாற்ற முடியும்? மாதங்கியின் முதல் கட்டத் திட்டமானது காலி. இரண்டாம் திட்டத்தினை தாய்க்குலத்தினை வைத்து ஆடுகின்றாள் மாதங்கி. சூரியா தனது அனுபவத்தில் புகுந்து விளையாடுகின்றான். கறுப்புச்சாமி நந்தினியை போக வேண்டிய இடத்திற்கு கூட்டிச் செல்கின்றது. புனிதாவின் காதல் கதையின் விளையாட்டை தெய்வம் ஏற்கனவே ஆடத் தொடங்கி விட்டது.
புனிதாவின் நடவடிக்கையானது தப்பான பாதையாகத் தெரிகின்றது என்பதனை ஊகித்துக் கொண்ட நந்தினி, சூரியாவிடமும், கல்யாணத்திடமும் சொல்லாமல் புனிதாவை பின் தொடர்கின்றாள். நந்தினி அவளாகச் செல்லவில்லை. மாறாக, அவள் கும்பிடும் தெய்வம் கறுப்புச் சாமிதான் அவளை அழைத்துச் செல்கின்றது.
Moontru Mudichchu - மூன்று முடிச்சு - 17.07.2026 - உண்மையற்ற மனித வழியை நம்பலாமா?
விலையான, உடம்பிற்கு அடிக்கும் sprayயானது, ஹரித்தாவின் பிரேதப் பரிசோதனையின் அறிக்கையின் படி, ஹரித்தாவின் உடலில் ஹரித்தா பாவிக்கும் சென்ரின் வாசனையினை விட இன்னுமெரு சென்ரின் வாசனையானது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த சென்ரானது ஹரித்தாவைக் கொலை செய்தவளால் பாவிக்கப்பட்டதாக இருக்கலாம், அந்தக் கொலையாளியின் வியர்வையில் கலந்து ஹரிதாவின் உடலத்தில் விழுந்துள்ளது என்பதுதான் அந்த அறிக்கை சொல்வது.
அந்த சென்ரானது மிகவும் அரிதானது, மிகவும் விலை உயர்ந்தது, அரபு நாட்டின் இளவரசியால் பாவிக்கப்படுவது, அதாவது, பெண்கள் பாவிக்கும் சென்ராகும் என்பது றஞ்சித்துக்கும், கௌஷிக்கும் மட்டும்தான் தெரியும். ஆனால், அதனை சூரியா கண்டு பிடித்து விட்டான். எனவே, இப்போதைக்கு சூரியாவுக்கும், நந்தினிக்கும் அதன் விபரம் தெரிந்துள்ளது.
அந்த சென்ரினைப் பாவிப்பது, மிகவும் ஸ்பெஷல் ஆட்கள், அதுவும் பெண்கள்தான் பாவிப்பார்கள் என்பதானது இப்போதைக்குத் தெளிவாகி உள்ளது. அதனைப் பாவிப்பவர்கள் ஐந்து பேர்கள். முதலாவது, றஞ்ஜித், இரண்டாவது, மாதங்கி, மூன்றாவது, கௌஷி, நான்காவது, பரமேஸ்வரி. இதனை விட, கௌஷி, புனிதாவின் மேலே அந்த சென்ரை அடித்ததினால், புனிதா ஐந்தாவது நபராக சந்தேகத்தில் நம்மைப் பொறுத்தவரை உள்ளார்கள்.
கௌஷிக்குத் தெரியும் தான் பாவிக்கும் அதே சென்ரினை பரமேஸ்வரியும் பாவிக்கின்றா என்று. ஆனால், அதனை றஞ்சித் பாவிக்கின்றான் என்று கௌஷிக்குத் தெரியுமோ என்பது சந்தேகத்திற்கிடமாக இருக்கின்றது.
எனவே, இந்த சென்ரினைப் பாவிப்பவர்களில், முக்கியமானவர்களாக முன் நிறுத்தப்படுபவர்களாக, றஞ்சித், பரமேஸ்வரி, மாதங்கி ஆகிய மூவரும் இருக்கின்றார்கள். ஆனால், இந்த மூவரில், பரமேஸ்வரிதான் சந்தேகத்தின் பேர்வளிகளில் முன்னாளாக இருக்கின்றாள் என்பது நினைக்கத் தோன்றுகின்றது.
ஏனென்றால், றஞ்சித் கூடாதவனாக இருந்தாலும், ஹரித்தா அவனின் சகோதரி, மாதங்கி இந்த சீனிலே பிறகு வந்தவள், ஆனால், இங்குதான் இருந்தவள். கௌஷிக்கு றஞ்சித் அந்த சென்ரினை அடித்து விட்டு ஒரு போத்தலினைப் பரிசாகக் கொடுக்கின்றான். அதை வைத்துத்தான் கௌஷி புனிதாவின் மேலே அடித்து விடுகின்றான்.
எனவே, இறுதியாக உள்ளவள், ஹரித்தாவின் கொலையில் சம்பத்தப்பட்ட நபர் பரமேஸ்வரிதான் என்பது என் ஊகத்தில் தொக்கு நிற்கின்றது. ஆனால், மாதங்கியையும் நம்ப முடியாது. அவளுக்கு, றஞ்சித்துடனான குற்றங்களுடன் தொடர்பு இருந்தாலும் அவளுக்கென ஒரு சில கோட்பாடுகளுடன் அவள் இருக்கலாம் அல்லவா?
ஆனால், சுரேக்காவைக் கடத்தியது, மாதங்கிதான் என்று நினைக்கையிலே, அதற்கு உடந்தையாக இருப்பவன் றஞ்சித், அத்துடன் கூட்டுக் களவாணியாக இருப்பவன் கௌஷி என்பதும் புலனாகி உள்ளது.
கோட்டினால் போடப்பட்ட உத்தரவினால் சுரேக்காவின் கேசானது சூடு பிடித்துள்ளது. இரண்டு கிழமைகள் தவணைகளை விட, பொலிஸ் கொமிஷனரால் பொலிஸாருக்குக் கொடுக்கப்பட்ட கேடானது வெறும் 10 நாட்களே. பொலிஸ் படையே மிரண்டு போய் விளி பிதுங்கியுள்ள நிலையினிலும், பொலிஸுக்கே இந்தக் கேசானாது மிகவும் சவாலாக இருக்கையிலே, நந்தினியை சிம்பிளாக கறுப்பு சாமி கூட்டிச் செல்கின்றது சுரேக்கா அடைக்கப்பட்டிருக்கும் மாதங்கியின் வீட்டிற்கு.
ஆனால், சிக்கல் வருவதற்கு வாய்ப்பினைத் தாங்களாக ஏற்றுக் கொள்பவர்களாக, புனிதா, இறுதி இணைப்பாக இருக்கையிலே, அவளுடன் சேருகின்றா நந்தினி. புனிதா போன வீட்டினைக் கண்டதும் நந்தினி அந்த வீட்டினுள்ளே போய்ப் பார்க்க வேண்டும் என்று துணிந்ததுமல்லாமல், உள்ளேயும் நுளைந்தாள். சாவியைக் கண்டதும், வீட்டினுள் புகுந்தாள்.
சுரேக்காவோ புனிதாவைக் கண்டு கொண்டாள் இரு முறையாக. இரண்டாம் முறையாக புனிதா சுரேக்காவின் பக்கத்திற்கு அனுப்பப்பட்டாள். இது கௌஷியின் திட்டம். சுரேக்காவின் தோட்டினை பரிசாகக் கொடுத்துவிட்டதும் கௌஷியின் திட்டம்தான். இதனால், சுரேக்காவின் நினைவினிலே புனிதாதான் தன்னைக் கடத்தி வைத்திருக்கின்றாள் என்ற ஊகமானது, இப்போது இரண்டாம் முறை சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கையிலே உறுதியாகி விட்டது.
கிராமம் வேறு, பட்டணம் வேறு என்று தலைப்பாடாக சூரியா அடித்துச் சொல்லியும், புனிதாவின் கௌஷி மேலான காதலானது எல்லாவற்றினையும் மறைத்து விட்டது. மறைக்கவும் தொடங்கி விட்டது.
நந்தினியின் முயற்சியானது அதாவது, மாதங்கியின் வீட்டினுள் செல்வது வெற்றியாக அமையுமா?
தெய்வம் உறுதுணையாக இருந்து நந்தினிக்கு நல்வழி காட்டி சுரேக்காவைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்தாலும், இதில் பலவிதமான சட்ட சிக்கல்கள் இருப்பது எமக்குத் தெரிகின்றது. அதிலிருந்தும் நந்தினியும், புனிதாவையும் கறுப்புச்சாமி காப்பாற்றாமல் விட்டுவிடுமா?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!