posted 17th July 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
புது வாழ்வுக்குள் வருபவள் நிம்மதி பெறுவது எப்போ?
நந்தினியின் முடிவிற்காக கொம்பனியின் வேலையாட்களும், சூரியாவின் குடும்பமும் கீழே ஹோலினில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நந்தினியோ கொம்பனி எடுக்க வேண்டிய முக்கிய முடிவினைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில், அதாவது, கொம்பனியின் நிரந்தரமான CEOவாக பதவி வகிப்பதனால், நந்தினியின் தலையின் மேலே இந்தப் பொறுப்பானது விழுந்திருக்கின்றது. நந்தினிக்கோ படிப்பறிவு இல்லைதான். ஆனால், அவளை வழி நடத்துவதோ அந்த கறுப்புச் சாமியே. எனவே, அதற்கான நல்ல முடிவினை கறுப்புச் சாமியிடம் கேட்டுக் கொண்டு இருக்கின்றா நந்தினி. கறுப்புச் சாமியும் விடையினைக் கொடுத்து விட்டது.
ஒரு unitறிற்கு 50 தொழிலாளர் வீதமாக உடனடியாக வேலையினை விட்டுத் தூக்குவதனால், கொம்பனி வேலை நிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டு, அதனால் கொம்பனி சின்னாபின்னமாக சீரழிவதற்கு மாதங்கி, றஞ்சித்துடன் சேர்ந்து போட்ட திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.
Moontru Mudichchu - மூன்று முடிச்சு - 09.07.2026
நந்தினி கேட்ட கறுப்புச் சாமியும் அதே முடிவினைத்தான் சொல்லி விட்டது. இதனால், மிகவும், ஆதங்கங்கமும், மரியாதைக் குறைவும் சூரியாவிற்கும், அருணாச்சலத்திற்கும் ஏற்பட்டது. இதனால், வேலையாட்கள் மத்தியிலே மிகவும் அதிருப்தி, அருணாச்சலத்தின் குடும்பத்தின் மேலே உருவாகியது. இதனைக் கேட்டதும், மாதங்கியும், சுந்தரவள்ளியும் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள்.
ஆனால், நந்தினி இன்னமும் பேசி முடிக்கவில்லேயே! அவளது மூளையிலே ஒரு உன்னதமான முடிவினை அந்த கறுப்புச் சாமியே வெளிப்படுத்தியது. இந்த முடிவானது மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது. சாமி, நந்தினியின் புகழை உயர்த்தியது. இதுதான் தெய்வச் செயல், வழிகாட்டல் என்பது.
தோட்டக்காறி, தற்குறி என்று பலவிதமான பெயர்கள் கொண்டு சுந்தரவள்ளியால் அழைக்கப்படுபவதான் இந்த நந்தினி. எப்படித்தான் கேவலமாக நந்தினியை சுந்தரவள்ளி ஏசினாலும், எல்லாவற்றையும் அடக்கமாகத் தாங்கிக் கொள்ளுபவள்தான், சூரியாவின் மனைவியான, அருணாச்சலத்தின் மருமகளான இந்த நந்தினி. கஷ்டப்பட்ட தகப்பனால் உன்னதமாக வளர்க்கப்பட்ட பிறப்புதான் இவள்.
ஆனால், இவளின் தங்கை, புனிதா, பட்டணத்திற்கு வந்ததும் வராததுமாக றஞ்சித்தின் நண்பன் விரித்த வலையினில் வீழ்ந்து விட்டாள். அதாவது, திட்டமிட்டு புனிதாவைத் தூக்கினான் இவன். வயசுக் கோளாறு, இவளை, எல்லாவற்றினையும் நந்தினியிடமிருந்தும், வீட்டாரிடமிருந்தும் மறைக்கத் தொடங்க வைத்தது.
மாதங்கி புற்று நோய் போன்று மெல்ல மெல்லமாக புரையோடிக் கொண்டிருக்கின்றாள், சுந்தரவள்ளியின் குடும்பத்தினுள்ளே. இதனை, சுந்தரவள்ளி, நந்தினியின் மேலுள்ள வெறுப்பினால், மாதங்கியின் பக்கம் சாய்ந்து, தான் என்னதான் செய்கின்றேன் என்று கூடத் தெரியாமல், நிதானத்தினை இழந்தவவாய், புருஷனையும், சூரியாவையும் மதிக்காமல் எல்லாவற்றிற்கும் எதிர்த்து நிற்கின்றா.
சுந்தரவள்ளியோ ஆங்காரத்தினால், பணத்திமிரினால், ஒருவரையும் மதிக்காமல் ஏதேதோவெல்லாம் செய்கின்றா. இவ இப்போது ஆங்காரத்தின் உச்சத்தில் இருப்பதனால் தன்நிலையினை மறக்கின்றா.
தனது மகளை யார்தான் கடத்தி வைத்திருக்கின்றார்கள் என்று சிந்திக்கத் திராணியில்லாமல் எல்லா பழிகளையும் நந்தினி மேலே போட்டு தாண்டவம் ஆடுகின்றா.
நந்தினியின் குடும்பமோ இவர்களது தோட்டத்தில் ஒரு காலத்தில் வேலை செய்தவர்கள்தான். ஆனால், அவர்கள் இப்போது தங்களது சம்பாத்தியத்தில் கண்ணியமாகவும், நேர்மையாகவும், மானம் மரியாதையுடன் சீவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், சுந்தரவள்ளியைப் பொறுத்த மட்டில் நந்தினியின் குடும்பமோ தங்களுக்குக் கீழே வேலை செய்த தோட்டக்காரர்கள்தான்.
வேலைக் காரர் எப்பவும் வேலைக்காரர்கள்தான். ஆனால், இங்கு அதே வேலைக்காரன் இப்போது சுந்தரவள்ளியின் சம்பந்தியாகி விட்டாரே. இதுதான் இப்போது சுந்தரவள்ளிக்குள்ள பிரச்சினையே.
சுந்தரவள்ளியின் குடும்பத்தினைக் காப்பாற்றினாள் மருமகள் நந்தினி. சுந்தரவள்ளியின் மகளை றஞ்சித்திடமிருந்து காப்பாற்றினாள். நன்றியினை மறந்தா சுந்தரவள்ளி. பணத்தின் திமிர் அவவை கை கால் தெரியாமல் தாண்டவமாட வைத்துக் கொண்டிருக்கின்றது.
நந்தினியைப் பற்றியும், அவவின் குடும்பத்தினைப் பற்றியும் நன்கு சுந்தரவள்ளிக்குத் தெரிந்திருந்தாலும், நந்தினியை மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் சுந்தரவள்ளியின் ஆட்டம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இது மாறுமா?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!