posted 9th March 2026
இந்தப் பகுதி சீரியல் றிவூ and analysis ஆனது 02ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரையிலான சீரியல்களின் Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- சாரதாவும், விஜேயும் கோவிலில் வைத்து அவரவர்களது மனத்தினைத் திறந்தார்கள்.
- இருவரும் இனி என்ன செய்யலாம் என்பதனையும், இதுதான் உங்களது மறு வாழ்க்கையின் ஆரம்பம் அதைத்தான் கடவுளும் செய்கின்றார் என்று ஆறுதாலான சில வார்த்தைகளைச் சொன்னா சாரதா.
- காவேரிக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்து. கனவினில் வந்தவர் இப்போது வீட்டிற்கே வந்து விட்டார். அதுவும் தனது மாணவி அம்முவின் தகப்பனாகவும் இருக்கின்றார். இவர் ஏன் தனது கனவினில் வரவேண்டும் என்ற கேள்வியுடன் நிற்கின்றாள் காவேரி.
- விஜேயின் குடும்பம் ஒட்டு மொத்தமாகச் செய்த துரோகத்தினை மன்னிக்க முடியாமல் தவிக்கும் விஜேய். தங்களது துரோகத்தினை நியாயப்படுத்திய விஜேயின் குடும்பம்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 02 - 04.03.2026
தனக்கும், காவேரிக்கும், அம்முவுக்கும் செய்த துரோகத்தினையிட்டு கவலையுடனும், கோபத்துடனும் தாத்தாவின் மேலும், றாதா சித்தி, அன்பு சித்தப்பாவின் மேலும் மனவருத்தம் தாங்காமல் குறைப்பட்டான் விஜேய். இனித் தனது குழந்தையை நீங்கள் ஒருவரும் பார்க்கத் தேவையில்லை என்றும், தானே அவளை வளர்க்கின்றேன் என்றும் மிகவும் கடுமையாகச் சொன்னான் விஜேய்.
இதனை எதிர் பார்க்காத விஜேயின் வீட்டார்களில் ஒருவரும் தங்களது பிழைதான் என்பதனை ஏற்றுக் கொள்ளாமல், விஜேய் உனதும், பிள்ளையினதும் நன்மைக்காகவும், பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டுதான் தாங்கள் இவ்வாறு செய்தோம் என்று தாங்கள் செய்த துரோகத்தினை நியாயப்படுத்தினார்கள்.
ஆனால், விஜேய் காவேரியைத் தன் கண்ணால் காண வேண்டும் என்று திடங்கொண்டான். காவேரி வருவாள் என்று கூறியதற்கிணங்க விஜேய் காவேரியின் வீட்டின் முன்னால் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தான். காவேரியும் வந்தாள், தாய் சாரதாவும் வந்தா. ஆச்சரியத்தில் இதெல்லாம் உண்மைதானா என்று வியந்து போய் நின்றான் விஜய். ஆனால், சந்தோஷத்தில் மிதந்தவனாய், காவேரியின் முன்னாலும், சாரதா அத்தையின் முன்னாலும் முழு மனிதனாக உயிருடன் போய் நின்றான் விஜேய்.
விஜேயைக் கண்டதும் விறைத்துப் போனா சாரதா. ஏனென்றால், விஜேய் இறந்து விட்டதாகத்தான் சொல்லி வைத்தார்கள் விஜேயின் பாட்டியும், தாத்தாவும். இப்படியான அப்பட்டமான பொய்யினைச் சொல்லித்தான் காவேரியின் பிள்ளையை வாங்கினார்கள், சாரதாவிடம் இருந்து. அதுமட்டுமா, றாதாவும், அன்புவும் சாரதாவை இடைநடுவில் றோட்டினில் காணுகையில் விஜேய் இறந்து விட்டதாகவும், பிள்ளை தாத்தாவுடன் வெளிநாட்டில் சீவிப்பதாகவும் மேலும் அடுத்த பொய்யினைச் சொல்லி ஏற்கனவே சொன்ன பொய்யினை update பண்ணியதையும் விஜேயிடம் சாரதா கோவிலில் வைத்துச் சொன்னா.
ஆனால், விஜேயைக் கண்ட காவேரியோ அதிசயத்தினை ஆச்சரியத்துடன் பார்த்தாள். ஏனென்றால், விஜேயைத்தான் தான் கனவினுலும் கண்டதாகவும், அவர்தான் அம்முவின் தகப்பன் என்றும், இவர் ஏன் தனது கனவினில் வர வேண்டும் என்றும் கேள்விக்கு மேல் கேள்வியினைத் தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள் காவேரி.
விஜேயுடன் மிகவும் காரசாரமாகப் பேசிய சாரதா, காவேரியை விட்டு விட்டு கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்குவது போலப் போய் விஜேய் மாப்பிள்ளையுடன் விளக்கமாகவும், விபரமாகவும், ஒழிவு மறைவின்றி எல்லாவற்றினையும் கதைத்தா. விஜேயும் என்னென்ன தனது பக்கம் நடந்தன என்பதனையும் சொன்னார். காவேரியின் இப்போதைய நிலையினையும் சாரதா விளாவரையாகச் சொன்னா. இதனால் கவலையானது விஜேயின் மனதினை ஆட்கொண்டது.
இப்போதான விஜேயின் நிலைமாயானது காவேரியுடன் எல்லாவற்றினையும் கதைத்து அவளை சுகமாக்கலாம் என்பதுதான். ஆனால் அது நடைபெறும் சாத்தியக் கூறானது இல்லை என்பதனை சாரதா விளங்கப்படுத்தினா. அதற்கு உதாரணமாக காவேரியின் தகப்பன் சந்தானம் இறந்து விட்ட செய்தியினை காவேரியிடம் சொன்னதினை வைத்து காவேரியின் நிலமையானது மாறுபட்டதினை அறிந்து கொண்டதினால் வேறு எந்த அதிர்ச்சியான கதைகளைச் சொல்ல முடியாது என்று விளக்கினா சாரதா.
ஆனால், விஜேயின் உண்மையினை காவேரியிடம் சொல்ல முடியாத இக்கட்டில் சாரதாவின் குடும்பம். அப்படித்தான் சொன்னாலும், தனது பிள்ளை எங்கே என்றும், தனது கணவன் விஜேய் எங்கே என்றும் கேட்டால் தங்களிடமோ பதில் இல்லையே என்ற ஆதங்கத்தினையும் சாரதா நியாயப்படுத்தினா.
ஒருவாறக சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையில் விஜேயைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தா சாரதா. ஆனால் என்ன, காவேரி கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு துளைத்த எடுத்து விடுவா என்பதையும் தெரியாதவவா சாரதா. எதற்கும் துணிந்த விஜேய் மாப்பிள்ளையை வீட்டிற்கு அழைத்த வந்த சாரதா, அமைதியாக இருந்து இவர் போகட்டும் உன்னை வைத்துக் கொள்கின்றேன் என்றவாறு காவேரியின் பார்வை சாரதாவின் மேலே இருந்தது.
பிள்ளை அம்மு அழுது கொண்டிருக்கின்றாள், அவளை கட்டுப் படுத்த தகப்பனால் முடியவில்லை. ஒரு முறை ரீச்சரைக் காட்டி விட்டால் மட்டும்தான் அம்மு சமாதானப் படுவாள் என்று ஒரு போட்டினைப் போட்டா சாரதா. இதனை எதிர்பார்க்காத விஜயுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியமாக இருந்தது. இறுதியில், விஜேய் அம்முவை வீட்டிற்குக் கூட்டிவரச் சம்மதித்தார். இதில் விஜேயை விட சாரதாதான் மிகவும் சந்தோஷமாக இருந்ததையும் காவேரி அறிந்து கொண்டாள்.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!