posted 31st May 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- தமிழின் நிலைமையினை நிலைநிறுத்துவதற்கான முக்கிய நிகழ்வு இனி
- ஒரு பேப்பர் துண்டின் எழுத்து, வாழ்க்கையின் அடுத்த நிலையினை மாற்றும் நிலைமை
- சிபீயின் அன்பு, தமிழுக்கு உதவுமா? தாரத்தின் நிலைமையானது வார்த்தைகளினால் நிலைக்குமா?
- காரணங்கள் எத்தனை கூறினாலும், காதினால் உள்வாங்க முடியாத மனம் நிறைந்த விரக்தியுடன், வெறுப்புடனுமான வாழ்க்கை.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
இரத்த உறவு மனதினை உருக்குமா? வரட்டுக் கௌரவம் வாழ்வைக் குலைக்குமா?
தமிழ் துடிப்பதனையும், அவளின் பதட்டத்தினையும், தமிழை வெருட்டிக் கொண்டிருந்தாலும், சிபீ அவளின் மேல் அன்பினை வைத்துள்ளமையினை வெளிக்காட்டுகின்றது. தமிழ் பிரச்சினையினால் துடிக்கின்றாள் என்பதனை சிபீ உணர்ந்து கொள்வதோடு, அவளின் துடிப்பினைப் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பதையும் காணலாம்.
மீனாவின் கணக்குப் புத்தகத்தினுள் ஒரு பக்கத்தில் அகப்பட்ட DNA report ஆனது மீனாவால் கிரகிக்கப் படாமல் இருந்தது. சிபீயும், தமிழும் ஓடி வந்து அந்த reportடினை மீனாவிடமிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்றால், மீனா என்ன இலேசான ஆளா இப்போது? மீனா அவவிடம்தான் வீட்டின் நிர்வாகமே. அவவை இனி ஒருவராலேயும் ஏமாற்ற முடியாது. ஆனால், கணேஷனைப் பொறுத்த மட்டில், கணேஷனினதும், அமுதாவினதும் இனிப்பான, பாசம் நிறைந்த வார்த்தைகளால் மீனா ஏமாறுவதனைத் தவிர, மீனா இங்கு சிபீயிடமும், தமிழிடமும் ஏமாறுவதாக இல்லை.
ஆடிப் போனார்கள் தமிழும், சிபீயும். ஏதேதோவெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள், சிபீ தான் பிள்ளை என்பதனை மீனாவிடம் நடித்தும் காட்டினான். ஒன்றுக்குமே மீனா அசைவதாகத் தெரியவில்லை. தமிழ் தனது தாய் மாமனாம் பிரகாஷிடம் உண்மையினைச் சொல்லி முயற்சி செய்யும்படி சொல்லியும் மீனா உசும்புவதாகத் தெரியவில்லை.
இந்த விதமான மீனாவின் நடவடிக்கையானது ஒருவிதத்தில் நல்லதாக பெருமைப் பட வேண்டி இருந்தாலும், இப்போதைய சூழ்நிலைக்கு அது உகந்ததாக இல்லையே! இதில், தமிழின் புத்திமதியும் மீனா இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது, இப்போது அது தமிழுக்கு வினையாக முன்னுக்கு நிற்கின்றது.
தமிழுக்காகத் துடிக்கின்றான் சிபீ. உண்மையான அன்பு தமிழின் மேலே இல்லாவிட்டால் அவனின் உதரம் இப்படி ஆடுமா? ஆனால், அவன் தமிழுடன், கொஞ்சம் விளையாடிப் பார்க்கின்றான் போலும்.
அதுமட்டுமல்லாமல், ஜனாம்மா நினைப்பது போலன்றி, ego இருப்பதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அவனுக்கு ego இருந்திருந்ததுதான். ஆனால், இப்போது அது இருப்பதாக இல்லை.
அதுமட்டுமல்லாமல், தமிழ் அம்மு அத்தையின் மகள் என்று தெரிந்ததும், சிபீ உண்மையாக தமிழை வெறுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி சிபீ செய்யவில்லையே! அத்துடன், இந்த உண்மையானது ஜனாம்மாவிற்குத் தெரிந்து விட்டால், தான் தமிழை இழக்க வேண்டி நேரிடும் என்று சிபீ பயப்படுகின்றான். எனவேதான், அந்த விஷயத்தினை சிபீ தமிழை ஜனாம்மாவிடம், ஜனாம்மா இந்த உண்மையினைக் அவவாகக் கண்டு பிடிக்க முன்பு சொல்லும்படியாக மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றான்.
ஜனாம்மா என்ன செய்தாலும், அதற்குத் துணையாக தான் தமிழுடன் நிற்பதாக சிபீ அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றான். இதிலிருந்தும் தெரிகின்றது தமிழைப் பிரிந்து சிபீயால் வாழ முடியாது என்பதுவும், தமிழின் மேலே எவ்வளவிற்கு அன்பினை வைத்திருக்கின்றான் என்றும் உணரக் கூடியதாக இருக்கின்றது.
தமிழின் DNA Reportடினை எடுப்பதற்காக, தமிழும், சிபீயும், பிரகாஷும் சேர்ந்து போட்ட திட்டமானது சுதப்பி விட்டது. சிபீ மதுவைக் குடித்து விட்டான் என்று அவனது அம்மா மீனாவிடம் நடித்தான். அதற்காக மீனாவிடம் சிபீ அடியும் வாங்கினான். அதுமட்டுமா, ஜனாம்மாவிடம் அவனது கன்னம் பழுக்க அடுத்த அடியும் வாங்கினான். இதெல்லாம் ஏன்? சிபீ தமிழின் மேல் வைத்த அன்பினால்தானே!
தனக்காக சிபீ அடி வாங்கினான் என்பதனை மிகவும் வருத்தத்துடன் தமிழ் ஒத்தடம் பிடித்தாள். இப்படியான தமிழின் அரவணைப்பினை சிபி இரசித்துக் கொண்டிருப்பதும், அவன் தமிழின் மேல் வைத்த அன்பினைக் காட்டுகின்றது.
இத்தனை பிரச்சினைகளும் தனது மனைவி தமிழுக்கு வரக்கூடாதென்று சிபீ நினைத்தவனாய்தான், தமிழிடம் மீண்டும் மீ்ண்டும் தமிழை வற்புறுத்துகின்றான், ஜனாம்மாவிடம் தமிழைத் தானாகவே போய் உண்மையினை உடைத்துச் சொல்லும்படி. இப்படி தமிழ் செய்தால், மன்னிப்பும் கேட்டால், ஜனாம்மாவின் கோபம் குறைந்து ஒருவகையில் சமரசம் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் கூட.
சிபீ இதனை மிகவும் serious ஆகத்தான் சொல்கின்றான். ஆனால், இதனை எடுத்தான் கவிழ்த்தான் என்று உடனே ஜனாம்மாவிடம் சொல்லிவிட முடியாது. இதனை ஜனாம்மா ஏற்றுக் கொள்வாவா? அல்லது தமிழைத் தூக்கி எறிந்து விடுவாவா? இந்த Trial ஆனது மிகவும் ஆபத்தும் கூட. ஆனால், ஒரு point இருக்கின்றது. ஜனாம்மா, அம்முவை, தனது மகளை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றேன் என்று கோவிலிலே சந்தித்த போது, ஜனாம்மாவின் முடிவானது ஏற்றுக் கொள்வதில் இல்லை. மாறாக, தமிழின் அப்பாவை விட்டு விட்டு விட்டு வர வேண்டும் என்பதுதான்.
தமிழின் அப்பாவைத் தலை முழுகினால், தான் அம்முவின் குடும்பத்தினை தான் பார்ப்பதாகத்தானே ஜனாம்மா அன்று கோவிலில் வைத்து அம்முவிடம் கூறினா. ஆகையால், தமிழ் இப்போது தான் தான் அம்முவின் மகள் என்று கூறினால், ஜனாம்மா கோபப்பட வாய்ப்புகள் உண்டு. அதுமட்டுமல்லாமல், தமிழை மன்னிக்கவும் காரணங்கள் உண்டு.
இந்த விஷயத்தில் சிபீ ஏதாவது தமிழுக்கு ஆதரவாக இருப்பானா?
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!