posted 22nd May 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- மருமகளாக வந்தவளுக்கு மாமியார் வீ்ட்டிலே அடங்க வேண்டிய கட்டாயம்
- நல்வர்களாக வாழ விட்டு விடாமல் கெட்டவர்கள் எப்பவும் நல்லவர்களை மொய்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
- ஆதரவு இருந்தும், முழுவதுமாக இல்லாமல் அனாதரவாக இருக்கும் தமிழைப் போன்றோர் எத்தனை பேரின் கண்ணீர் வடிவதனால்தான் வானிலே காரிருள் இன்னமும் இருக்கு
- குடும்பத்தில் தலைவன் தடுமாறினால், இடறல்களுக்குள் புதையாமல் அக் குடும்பம் தவிப்பதானது தவிர்க்க முடியாது
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 22.05.2026
மருமகளுக்கும் மாமியாருக்குமான போட்டி ஆரம்பமானது. ஒரு போட்டி முடிய அடுத்த போட்டி ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அமுதா தனது குள்ளத்தனத்தினை மீனாவிடம் புகுத்த முனைந்தா. ஆனால், அமுதா எதிர்பார்க்காதது அங்கு நடந்தது. மீனா இப்படியான கேவலமான வழிகளை இனி சொல்ல வேண்டாம். போய்விடும்படி அமுதாவை துரத்தி விட்டா.
நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும், மீனாவே வெற்றி வாகை சூடினா. தமிழ் தோல்வியினைத் தழுவினா. ஜனாம்மாவால் மீனா போற்றப்பட்டா. ஆனால், பிரகாஷ் தமிழின் பக்கம்தான் நின்றார். சிபீயோ தமிழ் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவனது அம்மாவின் பக்கம்தான் இருந்தான்.
இந்த போட்டியிலே மீனா என்னென்று ஜெயித்தா என்று ஜனாம்மாவால் நம்ப முடியவேயில்லை. இதுதான் உண்மையான மீனாவின் கெட்டித்தனமா? அல்லது தமிழ் விட்டுக் கொடுத்தாளா? மீனாவோ எதுவிதமான குளறுபடிகளும் இல்லாமல் நேர்மையான முறையாகத்தான் போட்டியிலே பங்கேற்றினா. தமிழைச் சொல்லத் தேவையில்லைதானே.
அதற்காக மீனா குறுக்கு வழிகளைப் பாவிப்பா என்றில்லை. மீனாவிற்கோ சொந்த மூளை வேலை செய்ய விடாமல், கணேஷனும், அமுதாவும் மீனாவைக் குளப்புவதுதான் முக்கிய காரணம் மீனா பிழையாக நடப்பதற்கு.
அப்படியாக நேர்மையாக நடக்கும், குணம் படைத்த மீனாவிற்கு தனது மருமகள் தமிழ் நேர்மையானவளா இல்லையா என்று கூட மதிக்கத் தெரியாதவவா மீனா. மீனாவிற்கு கொஞ்சம் விளங்கிக் கொண்டிருக்கின்றது தமிழ் தனக்காக விட்டுக் கொடுக்கின்றாள் என்று. இதற்கு எதிராக இருப்பது, ஒருநாள் ஜனாம்மாவின் வீட்டிலே காய்கறி வெட்டுகையில் தமிழுக்கு எந்தக் கறிக்கு எப்படி வெட்ட வேண்டுமென்று ஜனாம்மாதான் பழக்கிக் கொடுத்தா.
இதனை வைத்துப் பார்க்கும் போது தமிழுக்கும், சமையலுக்கும் வெகுதூரம் என்றும் மீனா நினைக்கத் தோன்றுகின்றது. அது மட்டுமல்லாமல், ஜனாம்மாவிடம் சமையல் சம்பந்தமான போட்டியினை வைக்கும்படி தமிழ்தான் கேட்டுக் கொண்டாவோ என்பதில் சந்தேகமும் எழுகின்றது.
ஏனென்றால், கணக்கு சம்பந்தமான கேள்விகளென்றால், மீனாவால் தமிழை வெல்ல முடியாது. மீனாவை வெல்ல வைக்க வேண்டும் என்பது தமிழின் விருப்பம். அதனை ஜனாம்மாவிற்கும் எடுத்துச் சொன்னாளோ தமிழ் என்று சந்தேகிக்க இடமுண்டு.
இப்படியாக தமிழ் ஜனாம்மாவிடம் கூறிக் கொண்டிருந்ததை மீனா ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாவோ என்பதினையும் நினைக்கத் தோன்றுகின்றது.
ஜனாம்மாவின் சொந்தங்கள் ஒன்றாகக் கூடி ஜனாம்மாவைச் சந்திக்க அவவிடம் தங்களது பேரப் பிள்ளைக்கு ஆசீர் பெறுவதற்காக வந்தார்கள். ஜனாம்மாவும் குழந்தைக்கு ஆசீர் வழங்கினா. இது இவ்வாறிக்க, மீனாவோ குழந்தையைக் கொண்டு வந்தவர்களிடம் இந்தக் குழந்தையின் பெற்றார் கல்யாணமாகி எத்தனை மாதங்கள் என்று கேட்கையிலே, அவர்களின் கணக்குப்படி, குழந்தை சரியான காலங்களில் பிறந்து விட்டது. ஆனால், இந்தக் கேள்வியானது மீனாவிடம் வந்தது.
அந்தக் கேள்வியினால் கூனிக் குறுகிப் போனா மீனாவும், ஜனாம்மாவும். ஆனால், சிபீயோ எதுவிதமான reactionனும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்ததனை கண்டு கொண்ட மீனா மிகவும் கோபம் கொண்டா சிபீயின் மேலே. அதாவது, ஒருவன் தனது மனைவியை இழிவாகக் கதைக்கையிலே சிபீ ஒன்றும் கூறாமல் நின்றதனைக் கண்டித்தா. அத்துடன் எந்தக் காலத்திலும் உனது மனைவியை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் கடிந்து கொண்டா.
இந்த விஷயமானது எவ்வளவிற்கு சிபீக்கு விளங்கியது என்பது இனித்தான் தெரியும்.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!