posted 22nd May 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- தமிழின் ஆதங்கம், மனதினில் ஏற்பட்ட கலக்கம், உலக வாழ்க்கையில் அவளது இடம், சிபீயின் மனதினில் அவளின் இருப்பு எல்லாமே
- தனது அத்தை மீனாவின் அன்பிற்காக ஏங்கும் நிலைமையில் தமிழ். தியாகம் செய்யத் துணிந்தாள். தன்னை அர்பணித்தாள்.
- துரோகங்களின் உச்சமாக கணேஷனின் குடும்பம், இருக்கிறது காணாது என்று, அடுத்தவர்களின் இடங்களினுள் தலையினை விட்டுவிட துடிக்கும் நிலைமையினுள் வதங்கும் வாழ்க்கை
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 20.05.2026
தமிழின் குடும்பமோ ஒரு சிறு உலகத்தில்தான் வாழுகின்றது, அம்மா, அப்பா, சகோதரங்கள் அவ்வளவுதான். ஆனால், சிபீயின் உலகமோ பெரிசு. ஆனால், இந்த உலகம்தான் தமிழின் உலகமும் கூட. ஆனால், தமிழின் அம்மா, ஜனாம்மாவின் மகள், ஜனாம்மாவிற்கு செய்த கல்யாணத் துரோகம்தான் காரணமாக இருக்கின்றது. அந்தத் துரோகத்தினை ஜனாம்மா மறக்க நினைத்தாலும், சுற்ற உள்ளவர்கள் மன்னிக்க விட மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு சொந்தங்கள் அவசியம் இல்லை, சொத்துக்கள்தான் அத்தியாவசியமானது.
குலதெய்வக் கோவிலுக்கு ஜனாம்மாவின் குடும்பத்தவர்கள் அனைவரும் போவதற்கு ஆயத்தமாகின்றனர். தமிழுக்கும் இப்போ அதுதான் குலதெய்வம் என்று ஜனாம்மா கூறினா. தமிழ் சிபீயை கல்யாணம் பண்ணினால் மட்டும்தான் அது தமிழுக்கும் குலதெய்வக் கோவில் அல்லவே. மாறாக, அதுதான் ஜெயாவுக்கும் குலதெய்வக் கோவில்தான். அதனை ஒருவராலும் மாற்ற முடியாது.
ஊஞ்சலில் தமிழை வைத்து சிபீ ஆட்டிக் கொண்டிருக்கையிலே, இடைநடுவில் தமிழ் அழத் தொடங்கினாள். சிபீ அப்படி என்ன சொல்லி விட்டான்? எப்பவும், நான் உனக்கு புருஷன், நீ என்னுடைய மனைவி என்று கதைக் வேண்டாம் என்று எத்தனை முறைதான் தமிழிடம் சொல்வது சிபீ என்பதுதானே!
அப்படியல்ல, அதுவும் அல்ல, தமிழுக்கு இவ்வளவு உறவுகள் இருந்தும், ஒன்றும் இல்லாமல் இருக்கின்றதே என்பதுதான் அவளுடைய கவலையெல்லாமே!
ஜனாம்மாவின் கிராமம் அது. அங்குள்ள நாச்சியார் வீடு அவர்களது அரண்மனை. அங்குதான் ஜனாம்மா ஒவ்வொரு 6 மாதத்திற்கு அனைவரையும் கூட்டி வந்து நிலாச் சோறு சாப்பிட்டு, ஜனாம்மாவின் மடியிலே அனைவரையும் தாலாட்டி தூங்க வைப்பா என்பது கடந்த கால வாழ்க்கை. அவற்றை எல்லாம் சிபீயால் தமிழுக்குக் கொடுக்க முடியாதுதானே! அதெல்லாம் ஒன்றாக அமைவதற்காகத்தான் சிபீ தமிழை ஊஞ்சலில் வைத்து ஆட்டிக் கொண்டிருக்கின்றான்.
பிரகாஷின் பிடிவாதம் அவரது அம்மாவிடம் வேகவில்லை. ஆனால், சிபியின் அனுதாபக் கதையானது ஜனாம்மாவை உருக்கியது. அம்முவும் கோவிலுக்கு வரட்டும் என்று ஜனாம்மா விடை கொடுத்தா.
கோவிலிலே ஒரு வழக்கம் உண்டு. அதாவது, பொங்கல் வைப்பது. அதுவும், மாமியாரும், மருமகளும் அதனை வைக்க வேண்டுமாம். அப்படி வைப்பதால், யாருடைய பொங்கல் முதலில் பொங்குகின்றதோ அவருக்குத்தான் வீட்டிற்கு ஆட்சியுரிமை இருக்குமாம் என்பதுதான் ஐதீகமும் கூட. இதனை நினைவு படுத்தினா அமுதா, மீனாவிற்கு. அதுவும், தமிழைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேதான். இதே வேதாந்தத்தைத்தான் தேனுவும் தமிழிடம் சொன்னாள். ஆனால், தமிழ் என்ன சொன்னா? என்ன செய்தா?
விட்டுக் கொடுத்தாள், தன் உரிமையினை. யாருக்கு?, தனது மாமியாருக்கு. யார் அந்த மாமி?, தனது புருஷன் சிபீயின் அம்மா, தனது தாய் மாமன், பிரகாஷின் மனைவியுக்கு, தனது ஆசை பாட்டி, ஜனாம்மாவின் மருமகளுக்கு. ஏன் விட்டுக் கொடுத்தாள்? தனது அத்தை இந்த வீட்டில் மற்றவர்கள் முன்னால் கௌரவமாக இருக்க வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். விட்டுக் கொடுப்பதினால் தமிழ் கெட்டுப் போய் விடுவாளா?
மாமியாரின் பொங்கலை முதன் முதலாக பொங்க வைப்பதற்காக தனது பொங்கல் பொங்காதவாறு தணலைப் பிரித்து விட்டாள். இதனைக் கண்ட சிபீ கண்கலங்கினான். தான் கூட இப்படிச் செய்ய மாட்டேன் என்று தனது மனைவியை நினைத்து பெருமிதம் கொண்டான். ஆனால், தமிழுக்குக் கிடைத்த வாழ்த்து மாமியாரிடமிருந்து வழமையானதுதான். அதனையும் அவதானித்தான் சிபீ.
ஆனால், ஒருநாள் வரும், அந்த நாள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டுள்ள மீனா, தனது மருமகள் தமிழை எல்லார் முன்னாலும் கூப்பிட்டு ஒரேயடியாக எல்லாப் பொறுப்புக்களையும் ஒப்படைப்பா.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!