posted 14th May 2026
இந்த Serial Review & Analysisஇனி்ல் நீங்கள் பார்க்கப்போவது;
- அம்முவைக் கண்டு பிடித்து வீட்டிற்குக் கூட்டி வந்தார்கள், கணேஷனும், சிபீயும், தமிழும்
- தன்னிடம் ஒரு வார்த்தையும் கூறாமல் அம்மா வீட்டினை விட்டுச் சென்றது, தமிழுக்கு மிகவும் நெஞ்சினில் பாரமாக இருந்தது.
- தமிழுக்கோ வாழ்க்கை தங்களால் கெட்டுப் போகக் கூடாதென்று தாய் அம்மு நினைத்ததில் தப்பொன்றும் இல்லையே!
- கணேஷனின் கூற்றுகளில் ஐமிச்சம் கொண்ட பிரகாஷ். இதனைக் கேட்பதற்கோ சிபீ அப்போது இல்லாதது கணேஷன் செய்த பாக்கியமோ!
- மீனாவைக் கடிந்து கொண்ட சிபீ. கனவிலும் நினைக்காத நிகழ்வு. இந் நிலைமையினை மீனா மீண்டும் நீடித்தால் தன்னை இழக்க வேண்டி வரும் என்று சிபீ மட்டுமா கூறினான், பிரகாஷும் சேர்ந்து விட்டார்.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 13.05.2026
பிரகாஷ் செல்வரத்தினத்தினால் கொல்லப்படப் போகின்றார் என்று கேட்டதிலிருந்து ஆடிப் போனான் சிபீ. ரத்தினத்தின் மேலே மிகுந்த கோபத்துடன் உருவேற்றிக் கொண்டிருக்கும் சிபீ, இன்றைய போன் கோளினைக் கேட்டதும் மேலும், மேலும் ஆத்திரம் கொண்டான் சிபீ.
விரைந்து சென்று பிரகாஷை, தனது அப்பாவைக் காப்பாற்றி வீட்டிற்குக் கூட்டி வந்தான். ஆனால், அங்கு அடியாட்களுடன் ரத்தினம் இருக்கவில்லை.
வீட்டிலே தகப்பனைக் கூட்டி வருகையிலே, அவர்கள் வந்ததும் வராததுமாக, மீனாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் மழுப்புகையில், கணேஷன் இடைமறித்து, எல்லா உண்மைகளையும் கூறினான்.
அதாவது, சிபீ கோள் வந்துதான் போனதாகவும், செல்வரத்தினம் இந்த குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக அறிந்துதான் பிரகாஷ் போனதாகவும், மீனாவிடம் போட்டுக் கொடுத்தான், கணேஷன்.
இந்த விஷயம் கணேஷனுக்கு எப்படித் தெரியும்? என்று வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றார் பிரகாஷ். ஆனால், தனது தமையனுக்கு என்னென்று, அதுவும் இவர் வீட்டினுள்ளேதானே இருந்தார் என்று கூட மீனாவின் மூளையிலே எட்டவில்லை.
ஆனால், பிரகாஷிற்கோ கணேஷன் மேலே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. கணேஷனோ அந்த இடத்தில் ஆரம்பத்திலிருந்து இருந்தது போன்று எல்லாவற்றினையும் புட்டுப்புட்டு வைத்ததிலே சந்தேகம் உறுதியாகி விட்டது.
ஆனால், இந்த சமயம் சிபீ அங்கு இருக்கவில்லை. அதனால், சிபீக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. சிபீக்கோ தமிழின் மேலேதான் கரிசனை இருந்ததினால், தமிழைத் தேடி சிபீ சென்று விட்டான்.
தமிழோ தரையினில் உட்காந்தவாறு வீம்பி வீம்பி அழுது கொண்டிருந்தாள். சீபியும் அவளின் பக்கமாக இருந்து அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான்.
தமிழுக்கும் தனக்கும் ஒருவிதமான உணர்வு பூர்வமான உறவுகள் இல்லை என்று வீம்பு பிடித்துக் கொண்டிருக்கும் சிபீ, இவ்வாறாக கட்டி அணைத்து தமிழை ஆறுதல் படுத்துவதன் அர்த்தம்தான் என்ன?
சிபீயிடம் தமிழின் மேலே அன்பு இருக்கின்றது. ஆனால், அதனை வெளிப்படையாக அவன் காட்டுவதாக இல்லை. அத்துடன், சிபீக்கோ தமிழின் அப்பா செல்வரத்தினத்தின் மேலேதான் கோபம் இருக்கின்றதே ஒழிய, தமிழின் குடும்பத்தின் மேலே இல்லை.
சிபீ தனது தாய் மீனாவை கேள்விக்கு மேல் கேள்வி கேட்கையிலே, இதில் அம்மு யார் என்று ஜனாம்மாவிற்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், அப்போது தமிழ் அங்கு இருக்கவில்லை.
தமிழின் மனமோ மிகவும் கனத்தது. சிபீயின் அணைப்பினை விட ஜனாம்மாவின் அணைப்பு தமிழுக்குத் தேவையாக இருந்தது. தன்னிடம் தமிழின் மாமியார், மீனா, எரிஞ்சு விழுவதனை தமிழினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மாமியாரைக் கைக்குள்ளே போடும் வித்தையும், காரணமும் அவளுக்குத் தெரியவில்லை.
சிபீயும், பிரகாஷும் அம்முவையும், தேனுவையும், இசையையும் கூட்டிக் கொண்டு அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அம்மு ஏன் தன்னிடம் ஒன்றும் சொல்லாமல் வீட்டை விட்டுப் போனார்கள் என்று கவலை தமிழுக்கு. அதனை சிபீ ஆறுதல் படுத்தினான்.
தமிழை சிபீ உண்மையானவள் என்று ஆணித்தரமாக நம்பிக் கொண்டிருந்தாலும், சிபீக்கு தமிழின் அப்பா மேலே சொல்லப்பட்ட பழியானது அவனின் மனதினில் ஆழமாகப் பதிந்துள்ளது.
இதுவும் வாழ்க்கை. மற்றவர் கூறுவதுதான் நம்பிக்கையினைக் கொடுக்கும். நம்முடன் உள்ளவர்களின் வாக்கு பலமிழந்து வீணாகிவிடும். இதனை சரி என்று நிரூபிக்கவே முடியாது. இந்த வேதாந்தத்தினை மாற்றவே முடியாது.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!