posted 11th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்த Review & Analysisனில் கேட்கப்போவது;
- அம்முவின் கேள்விகள் அனைவரையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கையில், காவேரியின் நினைவுகள் கலங்கலாக இருக்கின்றதன் காரணம்
- பெரியவர்களின் மௌனத்திற்கு காரணங்கள் எத்தனையோ, ஆனால், குழந்தைகளின் மௌனம் ஒரேயொரு காரணத்திற்காக மட்டுமே
- முழுவதையும் அம்முவிற்கு விளங்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விஜேய்
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Mahanadhi - மகாநதி - 09.06.2026
அம்மு அவளது அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை. தாயாக வருவாள் காவேரி மிஸ் என்று அம்மு நினைத்த காவேரியே, தனது உண்மையான, தன்னைப் பெற்றெடுத்தவள் என்று தெரிந்த பின்பு, அவளால் என்னென்று அடங்கி, ஒடுங்கி இருக்க முடியும்?
காவேரிக்கும், அம்முவுக்குமான தொடர்புடைய கேள்விகள் அனைத்தையும், விஜேயின் வீட்டாரும், சாரதாவின் வீட்டாரும் தாங்கிக் கொண்டிருக்கையிலே, அம்மு ஒரு குழந்தை, அவளால் என்னென்று அந்தனை கேள்விகளையும், விடைகளையும் தனியாகத் தாங்கிக் கொள்ள முடியும்?
காவேரியோ உடலளவிலும், உள அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளாள். அவளும் இப்போது பிறந்த குழந்தையின் மனநிலை கொண்டவளாகத்தான் இருக்கின்றாள். இப்போது நடப்பனதான் அவளது மனத்திரையினிலே இருக்கும், பதிந்தும் இருக்கும். எப்படி குழந்தையானது தனது மனத்தினிலும், மூளையிலும் அன்றாட வாழ்க்கையிலே நடப்பனவெல்லாம் ஒவ்வொன்றாக கிரகித்து பதித்து வைத்துக் கொண்டிருக்கின்றதோ, அதே நிலைமைதான் இப்போது காவேரிக்கும்.
இங்கு அம்மு தனது வீட்டினிலே கேட்பது, தனது தாயும், காவேரிச் ரீச்சரும் ஒன்றா? என்பதுதான். ஆனால், அங்கு சாரதாவின் வீட்டிலோ, யாழினியின் கேள்வியோ, தானும் சித்தியும் நின்று எடுத்த போட்டோவில் இருப்பது, என்னென்று ஒரே உருவமாக இருக்கின்றார்கள் என்பதுதான்?
இரு குழந்தைகளும் கேட்பது ஒன்றேதான், ஆனால், வேறு வேறு கோணத்தில் கேட்கப்படுகின்றது. அவ்வளவுதான். இந்தச் சிறார்களின் கேள்விகளுக்கு விடை தெரிந்தும் சொல்ல முடியாத நிலையினில் இரு வீ்ட்டாரின் பெரியவர்கள்.
முன்பெல்லாம், காவேரி மிஸ்ஸைக் கண்டதும் ஓடோடி வந்து கட்டிப் பிடித்துக் கொள்ளும் அம்மு, இப்போது அமைதியாக ஒன்றுமே பேசாமல் இருப்பதற்குக் காரணம்தான் என்ன என்று ஒருவருக்கும் புரியவில்லை. அம்முவின் மௌனத்தின் அர்த்தம்தான் என்ன?
யாழினியின் கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் இல்லை, ஆனால், சொல்ல முடியாமல் தவித்த சாரதா குடும்பத்தினர்.
குழந்தைகளைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கு எதுவிதமான குறுக்கு மூளையோ அல்லது அதன் வேறுபட்ட வடிவமைப்பையோ அவர்கள் கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு கேள்வி, அதற்கான பதில் மட்டும்தான். ஆனால், பெரியோருக்கு அப்படி இல்லை. அவர்கள் எல்லாக் கோணத்திலேயும் ஒரு கேள்விக்கான பதிலைச் சொல்ல முன்பு யோசிப்பார்கள். அவர்கள் மனதில் உள்ள பதிலோ வேறு, சொல்லும் பதிலோ வேறு. அவர்களின் நினைவிற்கும், நிஜத்திற்கும் வெகு அளவிலான வித்தியாசம் இருக்கும்.
அம்முவின் கேள்விகளுக்கு எல்லா உண்மைகளையும் தொடர்ந்து ஒழித்து வைப்பதற்கு தன்னால் முடியாத காரணத்தினால், றாதா சித்தி சொன்னதினைக் கடிந்து கொண்ட விஜேயுக்கு, றாதா சித்தி கேட்ட கேள்விக்கு விஜேயால் பதில் சொல்ல முடியவில்லையே!
எனவே, அம்மு கேட்ட கேள்விக்கான பதில் வேறு, றாதா கேட்ட கேள்விக்கு எதிர்பார்த்த பதில் வேறு. அவைகள் விளங்குவதிலும் விளங்காமல் இருக்கும் கேள்விகள் அவை.
இனி, அம்மு தனது அம்மா காவேரியை அம்மா என்று கூப்பிடுவாளா? அல்லது வழமை போல மிஸ் என்றுதான் அழைப்பாளா?
அம்முவின் மனநிலையினையும், அவளது மன உளச்சலையும் பற்றி பெரியவர்கள் சிந்திப்பார்களா? அல்லது காவேரியைப் பற்றி யோசிப்பார்களா?
அம்மு ஒரு குழந்தை. ஆகையால், அவளின் மனநிலையானது இவ்வளவு பெரிய சுமையினைத் தாங்கும் சக்தி இருக்குமா?
அதே குழந்தை மனநிலைக்கு காவேரியைக் கொண்டு சென்றது அந்த பாரிய விபத்து. அதன் பாதிப்பானது தொடர்ந்து இருக்குமா என்பதற்கான updateரினை விஜேய் கேட்டானா? காவேரியின் மனநிலையானது பிள்ளை அம்முவின் ஸ்பரிசத்தினால் மாறக் கூடுமா?
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, hype பண்ணி share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇல் சந்திக்கின்றேன்.
வணக்கம்!