Tamil News | Thaenaaram | Obituary Notices | Thaenaaram | Advertisements | Thaenaaram | Medical Articles |

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

ஈஸ்டர் தாக்குதல் பலியானோர் புனிதர்களாக அறிவிக்கப்படுவர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களை புனிதர்களாக கத்தோலிக்க திருச்சபை அறிவிக்கவுள்ளது என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கந்தானை புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின்போது பேசிய கர்தினால்,

இந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை நாடு கொண்டாடும்போது இதற்கான முதல் படி எடுக்கப்படும் என்றார்.

"ஏப்ரல் 21, 2019 அன்று தேவாலயங்களில் இறந்தவர்கள் தாங்கள் நம்பியதற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். அன்று அவர்கள் கிறிஸ்துவை நம்பியதால் தேவாலயத்திற்கு வந்தனர். மற்ற புனிதர்களைப் போல கிறிஸ்துவை நேசித்ததால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர்.

"ஒருவர் தியாகம் செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே அவரை புனிதர் என்று பெயரிட முடியும். எனவே, ஈஸ்டர் ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி புனிதர்களாக அறிவிப்பதை முன்னோக்கி நகர்வோம்.

"கிறிஸ்தவம் என்பது தேவாலயங்களில் மத வழிபாடுகளில் ஈடுபடுவது மட்டுமல்ல. நாம் நீதிக்காக நிற்க வேண்டும். மற்றவர்களின் நீதிக்காக நாம் பேச வேண்டும். இதைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் திருச்சபை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தனது திருமறையில் நமக்குக் கற்பித்துள்ளார்" என்றும் கர்தினால் கூறினார்.

Tamil News | Thaenaaram | Obituary Notices | Thaenaaram | Advertisements | Thaenaaram | Medical Articles |

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News